
நமது மாவட்டத்தின் அருமை தோழர் M .முருகையா அவர்கள் நமது மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் அத்துணை மாவட்டங்களிலும் தனது தொழிற்சங்க பணியால் ஒரு சிறப்பு மிக்க தலைவனாக வலம் வந்தவர் .ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் தனி சிறப்பு மிக்க தோழர் .பரிவு அடிப்படையில் பணி நியமனம் பெற்று தந்து பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் . தமிழ் மாநில சங்கத்தின் உதவி செயலராக ,TNTCWU சங்கத்தின் மாநில தலைவராக ,CCWF அனைத்திந்திய சங்கத்தின் ஒரு பொறுப்பாளராகவும் திகழ்ந்த தோழர் முருகையா அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு உடல் நல குறைவால் காலமானார் .அன்னார் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் தனது செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது . அவரது இறுதி நிகழ்ச்சி 22/03/2019 அன்று மதியம் 2 மணிக்கு சாத்தூர் நகரில் பஸ் நிலையம் அருகில் உள்ள தென்வடல் புது தெருவில்உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெற உள்ளது .
No comments:
Post a Comment