அனைத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக 14/11/2018 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் தொடங்கி விருதுநகர் மெயின் பஜார் வழியாக மேலரத வீதி வந்து தேசபந்து மைதானத்தில் நிறைவு பெற்றது .இந்த பேரணிக்கு SNEA மாவட்ட செயலர் திரு .செந்தில்குமார் அவர்கள் தலைமை வகித்தார் .பேரணியில் BSNLEU மாவட்ட செயலர் துவக்க உரை நிகழ்த்தினார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் , AIBSNLEA மாவட்ட பொருளாளர் திரு ,மணிகண்டன் ,SNEA ராஜபாளையம் கிளை செயலர் திரு .தங்கவேலு ,AIBDPA சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .பேரணியை முறையாக SNEA மாநில சங்க நிர்வாகி திரு கோவிந்தராஜன் அவர்கள் துவக்கி வைத்தார் .இந்த பேரணியில் நமது BSNLEU ஊழியர்களும் ,TNTCWU சங்க தோழர்களும் ,AIBDPA தோழர்களும் ,பெரும் திரளாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .கலந்து கொண்ட அனைவர்க்கும் BSNLEU மாவட்ட சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது .
Thursday, November 15, 2018
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment