Thursday, April 19, 2018

தமிழக ஆளுனருடன் சந்திப்பு...

          நமது அகில இந்திய ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL, துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி 19.04.2018 அன்று அனைத்து மாநில தலைநகர்களிலும், பேரணி நடத்தி ஆளுனரை சந்தித்து மனு வழங்க வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தது.

          தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL சார்பாக சென்னையில் பேரணி நடத்துவதற்கும் ஆளுனரை சந்திப்பதிற்கும் அனுமதி கோரி விண்ணப்பித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் நிலவும் சூழ்நிலைகளை காரணம் காட்டி நமக்கு பேரணி நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் ஆளுனரை சந்தித்து மனு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆளுனரை சந்திக்க நமது AUABல் உள்ள ஏழு மாநில செயலாளர்களின் பெயர்களை நமது தோழர்கள் ஆளுனர் மாளிகைக்கு அனுப்பியிருந்தோம். ஆனால் ஒரு சில காரணங்களால் ஐந்து நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 

          அதன் அடிப்படையில் 19.04.2018 அன்று காலை 10.30 மணிக்கு ஏழு சங்கங்களின் சார்பாக கையொப்பமிட்ட மனுவினை தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் (CS, BSNLEU), தோழர் G.S.முரளிதரன் (Offciating CS, NFTE), தோழர் R.ராஜசேகர் (CS, SNEA), தோழர் C.துரையரசன் (CS, AIBSNLEA) மற்றும் தோழர் M.ஓம்பிரகாஷ் (DS, SEWA BSNL) ஆகியோர் தமிழக ஆளுனர் திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து வழங்கினர். 

          மனுவினை முழுமையாக படித்து பார்த்த ஆளுனர், மனு விளக்கமாகவும், தெளிவாகவும் உள்ளது என்று கூறிய அவர் அந்த மனுவினை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...