Friday, April 13, 2018

All Unions and Associations of BSNL தர்ணா

          All Unions and Associations of BSNL சார்பாக 2018 ஏப்ரல் 12 அன்று விருதுநகர் பொதுமேலாளர் அலுவலகத்தின் முன்பு அமைக்கப்பட்ட துணை டவர் நிறுவனத் திட்டத்தை திரும்பப்பெறக்கோரி தர்ணா நடைபெற்றது.

          இந்தத் தர்ணாவிற்கு SNEA மாவட்டத் தலைவர் திரு செந்தில்குமார் தலைமை தாங்கினார். BSNLEUவின் பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர் கண்ணன் முன்னிலை வகித்தார். BSNLEUவின் மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். AIBSNLEAவின் மாவட்டச் செயலர் திரு பிச்சைக்கனி, NFTE BSNLன் தோழர் ரமேஷ், ஓய்வூதியர் சங்கத்தின் தோழர் சின்ன முனியாண்டி, SNEA மாநிலக் குழுவின் திரு கோவிந்தராஜன், அதிகாரிகள் சங்கத்தின் திரு நாராயணன், BSNLEUவின் மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கண்டன உரையாற்றினர். BSNLEUவின் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். 

            கோரிக்கை முழக்கங்களுடன் மாலை 5 மணிக்கு முடித்துக் கொள்ளப்பட்ட தர்ணாவில் ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைத்துச் சங்கங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
















No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...