Monday, November 21, 2016

ஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் ?

மாவட்ட நிர்வாகமே !
ஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் ?
அலெர்ட் நிறுவனமா ? SDE (குரூப்ஸ் ) ஸ்ரீவில்லிப்புத்தூரா ?
ஸ்ரீவில்லிபுத்தூர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் 2 ஒப்பந்த ஊழியர்கள் போடுவதற்கு மாவட்ட பொது மேலாளர் ஒப்புதல் கொடுத்தவுடன் அலெர்ட் நிறுவனம் 2 தொழிலார்களை நியமித்தது .உடனடியாக யாரோ பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று SDOT ஸ்ரீவில்லிபுத்தூர் உடனடியாக நியமனத்தை நிறுத்தி விட்டார் .அதன் பின் அதே நிறுவனம் மீண்டும் 2 பேரை நியமித்தது .அவர்கள் இரண்டு பேரும்  பணிக்கு வந்தவுடன்  அவர்களை நாளை முதல் வாருங்கள் என்று சொல்லிவிட்டார் அந்த   SDOT ஸ்ரீவில்லிபுத்தூர். அன்று மாலையே அலெர்ட் நிறுவனம் மீண்டும் புதிதாக 2 ஊழியர்களை நியமித்து கடிதம் எழுதியுள்ளது .முதல் இரண்டு நியமனங்களை ரத்து செய்தது ஏன் என்ற கேள்விக்கு அந்த நிறுவனம் SDE (குரூப்ஸ் ) ஸ்ரீவில்லிபுத்தூர் கடுமையாக நிர்பந்தம் செய்கிறார் என்று கூறியது .இன்னொரு அதிகாரி வட்டத்தில் இவர் தலையிட வேண்டிய அவசியம் என்ன ? மற்றும் ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் ஒப்பந்ததாரர் மீது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ? ஒப்பந்ததாரர் மீண்டும் மீண்டும் நியமனம் செய்ததின் அவசியம் என்ன ?

1.ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம்  செய்த SDE(குரூப்ஸ்) ஸ்ரீவில்லிபுத்தூர் மீது மாவட்ட நிர்வாகமே உரிய நடவடிக்கை எடு 
2. அதிகாரிகள் நிர்பந்தம் காரணமாக மீண்டும் மீண்டும் ஊழியர் நியமனத்தில் குளறுபடி செய்த அலெர்ட் நிறுவனம் மீது நடவடிக்கை எடு 
3.முதலில்   வந்த கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக 2 ஊழியர்களை நியமனம் செய்ய SDOT, ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு அறிவுரை வழங்கிடு .
உடனடியாக தலையிடாவிட்டால் மாவட்ட சங்கம் SDE குரூப்ஸ் ,ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு எதிராக  மாபெரும் ஆர்ப்பாட்டதை 23/11/2016 அன்று  நடத்தும் . அடுத்த கட்ட போராட்டமாக பெரும் திரள்  முறையீட்டு போராட்டம் GM அலுவலகம் முன் நடைபெறும் .
                    BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...